Thursday, January 28, 2010

'நண்பா உன்ட ACCOUNT நம்பர தர்றியா'

நண்பா, உன்னுடைய நம்பர தர்றியா! என்று ஒருவன் ஓடோடிவந்து கேட்கிறான். அவன்தான் மதன். பதிலுக்கு வாசு விளக்கம் கேட்கிறான்.... இல்ல வாசு, காசுக்கு சரியான பிரச்சனையாக இருக்கு, அவசரமாக பணம் தேவைப்படுது அம்மாவிடம் விசயத்த சொல்லி காசு கேட்டன்...

அம்மா Accountல போடுறம்னு நம்பரொண்டு கேட்டா! அதுதான் மச்சான் எனக்கு account நம்பர் இல்லையே!!!! எனக்கு Accountநம்பர் இல்லன்னு உனக்கு ஏற்கனவே நான் சொன்னேனே..

மதன் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும், ஏற்கனவே திட்டமிட்டுதான் பேசுவான்.

பாவம் வாசு, இவனின் சித்துவிளையாட்டுக்களை அறியாதவனாகவே இருந்தான்.......

உன்ட நம்பர தர்றிய என்று கேட்டான் மதன். கள்ளம்கபடம் தெரியாத வாசு அவனது இலக்கத்தை மதனிடம் கொடுத்தான். மதன் சொன்னதுபோல வாசுவின் வங்கிக்கணக்கில் பணம் போடப்பட்டது.வாசு அந்த பணத்தை எடுத்து மதனிடம் கொடுத்தான். இரண்டு நாட்களில் வாசுவை காவற்துறையினர் கைதுசெய்தனர்.

பத்து லட்சம் வங்கிக்கணக்கில் பணம் போடப்பட்டது. அதை எடுத்து கொடுக்கும்போதுகூட இவ்வளவு பெரிய தொகை எப்படி கணக்கில் வைப்பில் இடப்பட்டது என்பதை வாசு யோசிக்கவில்லை.

நடந்தது இதுதான்.......


ஒரு செல்வந்தரின் மகனை கடத்திவைத்துக்கொண்டு பணம் தருமாறு மிரட்டி அந்த பணத்தை வாசுவின் கணக்கில் இடுமாறு கணக்கிலக்கத்தை கொடுத்திருக்கிறான். பணத்தை வழங்கிய செல்வந்தர் மகனை மீட்டபிறகு காவல்துறையிடம் முறையிட்டு அந்த கணக்குக்கு உரிய வாசுவை தேடிப்பிடித்து கைது செய்திருக்கிறார்கள். இப்பொழுது வாசு சிறையில்.

அப்படி செய்யவில்லையென்று பலதடவை சொல்லியும் யாரும் வாசுவை நம்பவில்லை.

உங்கள் கணக்கின் இலக்கத்தை தாருங்கள், பணம் தேவைப்படுகிறது உங்கள் கணக்கில் வைப்பு செய்ய சொல்கிறேன். எடுத்துத்தரமுடியுமா என்று கேட்டால் கடுமையாக யோசித்து முடிவெடுங்கள்.

நன்றி...
N.நிழல்

3 comments:

  1. அண்ணா அடுத்த தொடர் எப்போ போடுவீங்க........................................................................

    ReplyDelete
  2. நேரம்தான் பெரிய பிரச்சனை

    ReplyDelete
  3. அண்ணா இந்த கதை நியமா? நிழலா?

    ReplyDelete