Saturday, April 10, 2010

மீண்டும் ஆடுகளத்தில் இந்துக்கல்லூரி........

இரத்மலானையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த கொழும்பு இந்துக்கல்லூரியில், அதிபர் திரு மன்மதராஜா அவர்களின் வழிநடத்தலில், பிரபல கிரிகட் பயிற்றுவிப்பாளர் திரு மோகன் அவர்கள் பயிற்சி வழங்க மீண்டும் கிரிகட் அணியொன்று உதயமாகியுள்ளது.

Sunday, February 28, 2010

"விண்ணைத்தாண்டி வருவாயா"


நீண்ட நாட்களுக்குப்பின் தமிழில் வந்த சிறந்த காதல் கதை. மன்னிக்கவும் காதல் விதை.

ஆரம்பம்முதல் முடிவுவரை காதல் வெள்ளத்தில் பார்வையாளர்களை மிதக்கவைத்திருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன். நிஜத்தை திரையில் வண்ணம் தீட்டியிருக்கிறார் இயக்குனர்.

சிம்பு என்றாலே வம்புதான் என்று பொதுவான கருத்தொன்று நம்மிடையே விண்ணைத்தாண்டி வருவாயா வெளிவரும்வரை இருந்தது. சிம்புவை முழுமையாக மாற்றியிருக்கிறார் கௌதம்.

கொஞ்சம் விவரமாக பேசுவோம்.........

கதாநாயகி த்ரிஷாவின் வீட்டில் கீழ்மாடியில் வாடகைக்கு இருக்கும் சிம்பு குடும்பம், த்ரிஷாவின் குடும்பத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது வசதியில் குறைந்தது. த்ரிஷா ஒரு மலையாள கிறிஸ்தவ பெண். திடிரென ஒருநாள் வீதியில் த்ரிஷாவை கண்ட சிம்பு மனதில் காதல் மலர்கிறது. இளைஞன் ஒருவனிடம் காதல் மலருபோது அவனுள் உருவாகும் மாற்றங்கள், அவன் படும் அவஸ்தைகள், ஒவ்வொன்றும் நிஜத்தின் நிழல்.

அவள் இதயத்திலும் காதல் உருவாகிறது ஆனால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். காரணம் அவள் குடும்ப சூழல்,சிம்புவைவிட ஒரு வயது அதிகம். ஆனாலும் ஒருகட்டத்தில் த்ரிஷா தனக்குள்ளும் காதல் இருப்பதை சிம்புவிடம் தெரிவிக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். நிஜத்தில் காதலர்கள் எங்கெல்லாம் செல்வார்களோ அங்கெல்லாம் இவர்களும் செல்கிறார்கள். காதல் வீட்டுக்கு தெரியவர பிரச்சனை ஆரம்பிக்கிறது. த்ரிஷா ஒதுங்க நினைக்கிறார். துரத்தும் சிம்புவின் நடிப்பு நிஜம். ஒரு உதாரணம்.... த்ரிஷாவின் வீட்டுக்கு வெளியில் நின்றுகொண்டு,த்ரிஷாவுக்கு தனது கையடக்க தொலைபேசியிலிருந்து தொடர்ச்சியாக அழைப்பெடுத்தாலும் த்ரிஷா அழைப்பை துண்டித்துகொண்டே இருக்க, அந்த கோபத்தில் கையிலிருந்த தொலைபேசியை நிலத்தில் அடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறும் சிம்புவின் நடிப்பில் உண்மை மட்டுமே இருந்தது.

சர்வதேச விருதுகளை வென்றபின் ரஹ்மான் பணியாற்றிய முதல் தமிழ் திரைப்படம். அதிக கவனமெடுத்திருக்கிறார். இசையும் கதையும் ஒன்றரக்கலந்திருப்பது சிறப்பு. பாடல்களும் அருமை. ஏன் இதயம் உடைத்தாய் பாடல் சிம்புவின் இதயம் உடையும்முன்னே வந்துவிட்டது. த்ரிஷா நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். த்ரிஷாவின் நடிப்பில் ஜோதிகா தெரிகிறார். சிம்புவின் நண்பராக வருபவர் எல்லோர் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். ஒளிப்பதிவில் தெளிவு, படத்தொகுப்பில் அமைதி, இவையெல்லாம் மேலதிக பலம்.

இறுதியில் சினிமாவையும் நிஜத்தையும் வேறுபடுத்தி காண்பித்தது தனி அழகு.[சாதாரணமானவர்களுக்கும் புரியும்படியாக அமைத்திருக்கலாம்]

இறுதிக்காட்ச்சியை பார்க்கும்போது கவனம் சிதறினால், முடிவில் என்ன நடந்தது? சேர்ந்தார்களா? பிரிந்தார்களா? என்ற சந்தேகத்துடன்தான் வீடு திரும்ப நேரிடும்.

இல்லை இல்லை என்றாலும், கௌதம் மேனனின் உண்மைக்கதைதான் விண்ணைத்தாண்டி வருவாயா என்பது உண்மை.

"விண்ணைத்தாண்டி வருவாயா" பலரது வாழ்க்கை.........

Monday, February 22, 2010

கலையுலகை இருளவைத்துவிட்டார், ஸ்ரீதர் பிச்சையப்பா!!!!


என்னை மிரளவைத்த ஸ்ரீதர் பிச்சையப்பா,கலையுலகை இருளவைத்துவிட்டார்.
எல்லோருக்கும் இவரை ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமே தெரியும். ஆனால், இவருக்கு கலையறிவு அதிகம். திறமையான ஓவியர்[இவரது இல்லத்தில் ஒரு தனி அறை உள்ளது. அந்த அறையின் பெயர் சித்திர வதைக்கூடம். அவர் வரைந்த அனைத்து ஓவியங்களும் அங்கு வைக்கப்பட்டுள்ளது] சிறந்த எழுத்தாளர், ஆழமான அர்த்தமுடைய கவிதைகளை படைத்தவர், நல்ல நடிகர், பாடகர், திறமையான பேச்சாளர், இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம்.....

அவருடன் பழகிய நாட்கள் என்வாழ்நாளில் மறக்கமுடியாதவை.

சூரியன் வானொலியில் நான் வழங்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கேட்கும் ஒருவராகவும் என்னை கவர்ந்தார். அவர் இறந்த செய்தி கேள்விபட்டதும் என் நினைவுக்குவந்தது கடந்த SEPTEMBER மாதம் எனது பிறந்தநாளை முன்னிட்டு அவர் எனக்கு அனுப்பிய வாழ்த்தட்டை.

உங்களை சந்திக்கவரும்போது, நவநீதனும் பிரபல திறமையான ஒலிபரப்பாளர் என்ற பெயர்பெற்று வருகிறேன். எனக்காக காத்திருங்கள்.........

நன்றி ஸ்ரீ அண்ணா......

நீங்கள் இல்லாத கலை, களை கட்டுமா???????????

Thursday, February 4, 2010

அஜித்தின் "அசல்" N. கருத்து.........




அஜித்தின் அசல் இன்றுதான் வெளியிடப்படுகிறது. ஆனாலும் நேற்று இரண்டு சிறப்பு காட்சிகள் காண்பிக்கப்பட்டன. நான் முதல் காட்சியை தெஹிவளை concord திரையரங்கில் பார்த்தேன்!

எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அஜித் சரண் பரத்வாஜ் என்ற மூன்று சிகரங்கள் இதுவரை இணைந்து தந்த அத்தனை படங்களும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன. 'அசல் கூட்டணி அசத்தல் கூட்டணி' திரையரங்குக்குள் செல்லும்போது வெளியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில், கதை இயக்கம் இரண்டிலுமே அஜித்தின் பெயரும் பிரசுரமாகியிருந்தது. ஆஹா ஏனைய நடிகர்கள் கதைக்குள் மூக்கை நுழைத்து கதையின் போக்கை மாற்றி சொதப்புவதுபோல் தல அஜித்தும் புறப்பட்டுவிட்டாரா? என்று நானும் எனது நண்பனொருவனும் ஒரு நிமிடம் நின்று யோசித்துவிட்டு உள்ளே நுழைந்தோம்..... திரைப்படம் ஆரம்பிக்கும்போது அஜித்தின் பெருமை சொல்லும் விதத்தில் திரையில் வழமையாக காண்பிக்கப்படும் எதுவும் இல்லை. சாதாரணமாக அஜித்குமார் என்று திரையின் ஓரத்தில் காண்பிக்கப்பட்டதும், எனது நண்பன் என்னை தட்டி காதருகில் வந்து அஜித் தலையிட்டு இப்படி செய்தது உண்மையில் பாராட்டப்படவேண்டும் என்றான்!

காட்சியமைப்புகள் படமாக்கப்பட்ட இடம், பாடல்கள் படமாக்கப்பட்ட இடம்(ஒளிப்பதிவு புதியவர்,புதுமை திரையில் தெரிகிறது) நடிகர்கள், இவை எல்லாம் அழகாகத்தான் இருக்கின்றது. கதை சாதரணமான மசாலாத்தனமானது. வேகம் அதிகரிக்கப்பட்டிருக்கலாம்.. பாடல்கள் முழுமையாக இல்லை. படத்தொகுப்பாளர் Antonyயின் முடிவுகளில் ஒன்றாக இருந்திருக்கலாம்.{கதையின் வேகத்துக்காக} எங்கே எங்கே மனிதன் எங்கே பாடல் படத்தில் இல்லை. சண்டை காட்சிகளில் புதிய வேகம் தெரிந்தாலும்,ஒருசில இடங்களில் யதார்த்தத்தை மறைத்து மசாலாத்தனம் தலைகாட்டுகிறது.{கொஞ்சம் கவனித்திருக்கலாம்} பிரதான வில்லன் சேட்டும்,(இது அவனது பெயர்) அவனது வில்லத்தனமும், அடியாட்களும் பிரமாண்டமாக காண்பிக்கப்படுகின்றன. ஆனால் தல அஜித், பாதுகாப்பு பலமாக இருக்கும் வில்லனின் கோட்டைக்குள் எந்த இடையூறும் இல்லாமல் உள்ளே புகுந்து வில்லனை கொன்று எல்லோரையும் மீட்டு மீண்டும் வெளியில் வருவதுபோன்ற காட்சிகளை மட்டுமே குறிப்பிடுகிறேன். அஜித் எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாகவும் அழகாகவும் நடித்திருக்கிறார். நன்றாக நடனமாடியுமிருக்கிறார். சமீரா ரெட்டி நடிப்பில் சிறப்பு. வழமைக்கு மாறாக பாவனா அழகாகத்தெரிகிறார்(என் கண்களுக்கு) பரத்வாஜின் பின்னணி இசை அதிரடி. பாடல்களும் பிடித்திருக்கின்றன. அஜித்தின் காதலி யார் என்ற போட்டியில் சமீரா அநியாயத்துக்கு சமாதானம் ஆகுறார்.இப்படியும் பெண்கள் இருக்கிறார்களா?இந்த கேள்வி சரணுக்கானது. பிரபு அளவுக்கு அதிகம் திரையில் தோன்றவில்லை.

மொத்தத்தில், முழுக்குடும்பமும் ஒன்றாக அமர்ந்திருந்து பார்க்கக்கூடிய திரைப்படம்தான் அசல்.

"அசல் அஜித்திற்கு இல்லை நசல்"

Thursday, January 28, 2010

'நண்பா உன்ட ACCOUNT நம்பர தர்றியா'

நண்பா, உன்னுடைய நம்பர தர்றியா! என்று ஒருவன் ஓடோடிவந்து கேட்கிறான். அவன்தான் மதன். பதிலுக்கு வாசு விளக்கம் கேட்கிறான்.... இல்ல வாசு, காசுக்கு சரியான பிரச்சனையாக இருக்கு, அவசரமாக பணம் தேவைப்படுது அம்மாவிடம் விசயத்த சொல்லி காசு கேட்டன்...

அம்மா Accountல போடுறம்னு நம்பரொண்டு கேட்டா! அதுதான் மச்சான் எனக்கு account நம்பர் இல்லையே!!!! எனக்கு Accountநம்பர் இல்லன்னு உனக்கு ஏற்கனவே நான் சொன்னேனே..

மதன் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும், ஏற்கனவே திட்டமிட்டுதான் பேசுவான்.

பாவம் வாசு, இவனின் சித்துவிளையாட்டுக்களை அறியாதவனாகவே இருந்தான்.......

உன்ட நம்பர தர்றிய என்று கேட்டான் மதன். கள்ளம்கபடம் தெரியாத வாசு அவனது இலக்கத்தை மதனிடம் கொடுத்தான். மதன் சொன்னதுபோல வாசுவின் வங்கிக்கணக்கில் பணம் போடப்பட்டது.வாசு அந்த பணத்தை எடுத்து மதனிடம் கொடுத்தான். இரண்டு நாட்களில் வாசுவை காவற்துறையினர் கைதுசெய்தனர்.

பத்து லட்சம் வங்கிக்கணக்கில் பணம் போடப்பட்டது. அதை எடுத்து கொடுக்கும்போதுகூட இவ்வளவு பெரிய தொகை எப்படி கணக்கில் வைப்பில் இடப்பட்டது என்பதை வாசு யோசிக்கவில்லை.

நடந்தது இதுதான்.......


ஒரு செல்வந்தரின் மகனை கடத்திவைத்துக்கொண்டு பணம் தருமாறு மிரட்டி அந்த பணத்தை வாசுவின் கணக்கில் இடுமாறு கணக்கிலக்கத்தை கொடுத்திருக்கிறான். பணத்தை வழங்கிய செல்வந்தர் மகனை மீட்டபிறகு காவல்துறையிடம் முறையிட்டு அந்த கணக்குக்கு உரிய வாசுவை தேடிப்பிடித்து கைது செய்திருக்கிறார்கள். இப்பொழுது வாசு சிறையில்.

அப்படி செய்யவில்லையென்று பலதடவை சொல்லியும் யாரும் வாசுவை நம்பவில்லை.

உங்கள் கணக்கின் இலக்கத்தை தாருங்கள், பணம் தேவைப்படுகிறது உங்கள் கணக்கில் வைப்பு செய்ய சொல்கிறேன். எடுத்துத்தரமுடியுமா என்று கேட்டால் கடுமையாக யோசித்து முடிவெடுங்கள்.

நன்றி...
N.நிழல்

Saturday, January 16, 2010

யாரிலிருந்து 6 வரை....... கம்பி எண்ணும் நான்கு பேரின் உண்மைக்கதை.....


யாரிலிருந்து 6 வரை எனும் தலைப்பில் வித்தியாசமான சில அனுபவங்களை, எனது வலைப்பதிவில் பதிவிடலாமென நீண்ட சிந்தனைக்குப்பின் முடிவெடுத்துள்ளேன்.....

இது ஒரு நேரடி விஜயம்.....


யாரிலிருந்து 6 வரை... இதோ முதல் பதிவு......................


N.நிழல் கதை-01

இரண்டு நண்பர்கள், ஒருவர் சிவா மற்றையவர் மனோ. இவர்களில் மனோ மிக முக்கியமானவன் [குறிப்பு->ஊரும் பேரும் வேறு] தீந்தை பூசும் வேலை செய்பவர்கள்.



இவர்களுடன் இன்னும் இருவர். எல்லோரும் ஒன்றாக இணைந்து சிவாவின் தலைமையில் ஒரு குழுவாக வேலை பார்த்துவந்தனர்.

புதிதாக ஒரு ஒப்பந்தம், இரண்டு மாடிகளைக்கொண்ட வீடொன்றுக்கு தீந்தை பூசவேண்டும்.
ஒப்பந்தத்தொகையும் தீர்மானித்து உடன்பாடு எட்டப்பட்டது. வேலைகளும் ஆரம்பமாகின.முற்பணம் கொடுக்கப்பட்டது.



ஆனால், வேலை முடிவடையும் தறுவாயில் இருக்கும்போது,வீட்டுக்காரர்களின் நடவடிக்கைகளில் பல்வேறு மாற்றங்கள். விஷயம் தெரியாத சிவா தலைமையிலான தீந்தை வேலையாட்கள்,அனைத்து வேலைகளையும் முடித்தனர்.


கிடைக்கவேண்டிய மீதித்தொகையினை பெற்றுக்கொள்ள சென்றால், பணம் கிடைத்தபாடில்லை.

எத்தனையோமுறை அலைந்தும் சரிவரவில்லை.

என்ன செய்திருப்பார்கள்???????????

இது உண்மை சம்பவம் என்பதனை மீண்டும் நினைவூட்டுகிறேன்.

மீதிப்பணத்தை பெற்றுக்கொள்ள வழிதெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த இந்த குழுவினருக்கு வீடு புகுந்து கொள்ளையடிப்போம் என்ற யோசனையை மனோ முன்வைத்தான்.

செய்வதறியாதிருந்த இவர்களுக்கு மனோவின் ஆலோசனை சரியென முடிவானதால், இன்று இவர்கள் எல்லோரும் சிறைச்சாலையில் கம்பி எண்ணிக்கொன்றிக்கிரார்கள்.

ஒருநாள் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப்பார்த்து மனோவின் தலைமையில் நால்வரும் ஒன்றாக இணைந்து அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். மனோவின் திட்டப்படி பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டன. மனோ தீட்டி வைத்திருந்த திட்டப்படி நால்வருக்கும் எந்த தடுமாற்றமும் இல்லாமல் தப்பியோடவும் முடிந்தது. அடுத்தநாள் விடிந்ததும் தமது வீடு கொள்ளயிடப்பட்டமை தெரிந்ததும், அருகில் இருந்த காவற்துறையில் முறைப்பாடொன்றினை பதிவு செய்தனர்.

யார்மீது சந்தேகமென்று கேட்டதற்க்கு, கொள்ளையர்கள் இந்த குழுதான் என உறுதியாக தெரிவித்தனர். முதலில் பிடிபட்டது மனோ,விசாரணையில் எல்லோர் பெயர்களையும் பட்டியளிட்டான்.

இன்று சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்....மச்சான் வெளியில் சென்று பெரிய Game ஒன்று குடுக்குறன் பாரு! இவை, மனோ இப்போது அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கும் வார்த்தைகள்.......

நால்வரும் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு புலம்பிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன்...............1 2 3 4 5 6....... [6 கம்பிகளையும் திரும்பத்திரும்ப எண்ணுவதுதான் அங்கிருப்பவர்களின் பொழுதுபோக்கு]

Wednesday, January 13, 2010

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்,



தைப்பொங்கல் மக்களால் இயல்பாக கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் தாமே கண்டுணர்ந்து தமது உழைப்பிற்க்கு உதவிய இயற்க்கை சக்திகளுக்கும் தம்மோடு சேர்ந்து உழைத்த கால் நடைகளுக்கும் மகிழ்ச்சியை தெரிவிக்கும் விழாவே தைத்திருநாள்.

உழவர்கள் மழையின் உதவியால் ஆடிமாதம் முதல் உழைத்து சேர்த்த நெல்லை மார்கழியில் தமது வீட்டிற்க்கு எடுத்து செல்லும் நாளே தைப்பொங்கல்.

சங்க காலத்தில் அறுவடை காலங்களில் நல்ல மழை பெய்யவும் நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்தனர். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி சூரியன் உதவிய கால்நடைகள் போன்றவற்றிற்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் தைத்திருநாள் கொண்டாட்டங்களாக மாறியது.