Saturday, January 16, 2010

யாரிலிருந்து 6 வரை....... கம்பி எண்ணும் நான்கு பேரின் உண்மைக்கதை.....


யாரிலிருந்து 6 வரை எனும் தலைப்பில் வித்தியாசமான சில அனுபவங்களை, எனது வலைப்பதிவில் பதிவிடலாமென நீண்ட சிந்தனைக்குப்பின் முடிவெடுத்துள்ளேன்.....

இது ஒரு நேரடி விஜயம்.....


யாரிலிருந்து 6 வரை... இதோ முதல் பதிவு......................


N.நிழல் கதை-01

இரண்டு நண்பர்கள், ஒருவர் சிவா மற்றையவர் மனோ. இவர்களில் மனோ மிக முக்கியமானவன் [குறிப்பு->ஊரும் பேரும் வேறு] தீந்தை பூசும் வேலை செய்பவர்கள்.



இவர்களுடன் இன்னும் இருவர். எல்லோரும் ஒன்றாக இணைந்து சிவாவின் தலைமையில் ஒரு குழுவாக வேலை பார்த்துவந்தனர்.

புதிதாக ஒரு ஒப்பந்தம், இரண்டு மாடிகளைக்கொண்ட வீடொன்றுக்கு தீந்தை பூசவேண்டும்.
ஒப்பந்தத்தொகையும் தீர்மானித்து உடன்பாடு எட்டப்பட்டது. வேலைகளும் ஆரம்பமாகின.முற்பணம் கொடுக்கப்பட்டது.



ஆனால், வேலை முடிவடையும் தறுவாயில் இருக்கும்போது,வீட்டுக்காரர்களின் நடவடிக்கைகளில் பல்வேறு மாற்றங்கள். விஷயம் தெரியாத சிவா தலைமையிலான தீந்தை வேலையாட்கள்,அனைத்து வேலைகளையும் முடித்தனர்.


கிடைக்கவேண்டிய மீதித்தொகையினை பெற்றுக்கொள்ள சென்றால், பணம் கிடைத்தபாடில்லை.

எத்தனையோமுறை அலைந்தும் சரிவரவில்லை.

என்ன செய்திருப்பார்கள்???????????

இது உண்மை சம்பவம் என்பதனை மீண்டும் நினைவூட்டுகிறேன்.

மீதிப்பணத்தை பெற்றுக்கொள்ள வழிதெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த இந்த குழுவினருக்கு வீடு புகுந்து கொள்ளையடிப்போம் என்ற யோசனையை மனோ முன்வைத்தான்.

செய்வதறியாதிருந்த இவர்களுக்கு மனோவின் ஆலோசனை சரியென முடிவானதால், இன்று இவர்கள் எல்லோரும் சிறைச்சாலையில் கம்பி எண்ணிக்கொன்றிக்கிரார்கள்.

ஒருநாள் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப்பார்த்து மனோவின் தலைமையில் நால்வரும் ஒன்றாக இணைந்து அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். மனோவின் திட்டப்படி பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டன. மனோ தீட்டி வைத்திருந்த திட்டப்படி நால்வருக்கும் எந்த தடுமாற்றமும் இல்லாமல் தப்பியோடவும் முடிந்தது. அடுத்தநாள் விடிந்ததும் தமது வீடு கொள்ளயிடப்பட்டமை தெரிந்ததும், அருகில் இருந்த காவற்துறையில் முறைப்பாடொன்றினை பதிவு செய்தனர்.

யார்மீது சந்தேகமென்று கேட்டதற்க்கு, கொள்ளையர்கள் இந்த குழுதான் என உறுதியாக தெரிவித்தனர். முதலில் பிடிபட்டது மனோ,விசாரணையில் எல்லோர் பெயர்களையும் பட்டியளிட்டான்.

இன்று சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்....மச்சான் வெளியில் சென்று பெரிய Game ஒன்று குடுக்குறன் பாரு! இவை, மனோ இப்போது அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கும் வார்த்தைகள்.......

நால்வரும் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு புலம்பிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன்...............1 2 3 4 5 6....... [6 கம்பிகளையும் திரும்பத்திரும்ப எண்ணுவதுதான் அங்கிருப்பவர்களின் பொழுதுபோக்கு]

No comments:

Post a Comment