இலங்கையில் தமிழ் திரைப்படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்துமளவுக்கு உருவாவதில்லை,அப்படி இருக்கும்போது இலங்கையில் வானொலி அறிவிப்பாளர்கள்தான் நட்சத்திரங்கள்,இவர்களின் மனம் நோகும்படியான ஒரு கட்டுரையினை இருக்கிறம் வெளியிடுமென கனவிலும் நினைக்காதவன் நான்,தேர்ச்சி பெற்றவர்கள் இருக்கும் "இருக்கிறம்"என்று மனதிற்குள் நெகிழ்ந்ததுண்டு.........
ஒலிபரப்பாளர்கள் பற்றிய தவறான கருத்துகளை பரப்ப நினைப்பது மிகப்பெரிய பிழை,இது ஆரோக்கியமான செயல் அல்ல.
ஊடகம் போட்டி நிறைந்த இடம் என்பதை எல்லோரும் அறிவார்கள்,இங்கு ஜெயிக்க வேண்டுமென்றால் உழைக்க வேண்டும்,இது தவிர தேடல்,நேரம்பார்க்காமல் வேலை செய்யும் பழக்கம்,நேர்மையாக நடந்துகொள்ளும் பண்பு,இவை இருந்தால்தான் சாதிக்கலாம், தவறினால் ஊடகங்களில் மட்டுமல்ல வேறு எந்த தொழிலாக இருந்தாலும் குறைந்த ஊதியம்தான் கிடைக்கும்.
வாய்ப்புகள் எல்லோருக்கும் கிடைக்காது என்பது உண்மைதான்,கிடைக்கும் வாய்ப்பினை சரியாக பயன்படுத்த தெரியாதவர்களின் புலம்பல் என்று எடுத்து ஆறுதல் சொல்லி அமர்வதே எமக்கு அழகென்று நினைக்கிறேன்..........நான் சொல்வது சரிதானே.....
கருணையூரான் said...
நீங்க சொல்வது சரிதான்...ஆனால் உங்கள் எதிர்க்கருத்தை அதே சஞ்சிகையில் வெளியிடலாமே.....அது ஒருவனின் கருத்து அதை போட்ட "இருக்கிறம்" சஞ்சிகையில் தப்பு இருக்கா எண்டு எனக்கு தெரியல...ஆனால் அவர்கள் விற்பனையைக் கூட்டவும் செய்திருக்கலாம்......
கருணையூரான்,
அவரது தனிப்பட்ட கருத்தினை வெளியிட பத்திரிகை ஒன்றினை பயன்படுத்தக்கூடாது என்பதே எனது கருத்து,வலைப்பதிவில் சுதந்திரமாக எதை வேண்டுமானாலும் பதிவிடலாம்,
ஆனால் பத்திரிகை ஊடகம் அப்படியில்லை,அவரது உள்ளக்குமுறலை வெளியிடும் "இருக்கிறம்"தவிர்க்கப்பட வேண்டியவற்றை தொகுத்து வெளியிட்டிருக்கலாம் என்பதே எனது கருத்து............
நீங்கள் சொல்வதுபோல எனது எதிர் கருத்தினை அதே சஞ்சிகையில்வெளியிடலாம்,
ஆனால் அவர்களோடு தொடர்புகொண்டு இதனை பிரசுரிக்க எனக்கு நேரம் இல்லை.
எனது வலைப்பூவில் நான் எழுதிய கருத்தினை அவர்கள் பிரசுரிப்பதாக இருந்தால் தாராளமாக பிரசுரிக்கலாம்......தடையில்லை.......