Tuesday, May 11, 2010

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்.............


விமர்சனம்.....

ஆர்ப்பாட்டத்தோடு வெளிவந்து மண்ணைகவ்விக்கிடக்கும் சில திரைப்படங்களுக்கு மத்தியில் இரும்புகோட்டை முரட்டு சிங்கம் நிமிர்ந்து நிற்பது நிச்சயம்.........

ஆரம்பம் முதல் முடிவுவரை திரையரங்கம் முழுவதும் ஒரே சிரிப்புச்சத்தம்தான்....

சீரியசான கட்டம் வந்துவிட்டது என்று நினைத்தால் உடனே வந்துவிடுகிறது சிரிப்பு.....

இயக்குனர் சிம்புதேவனின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை... இப்படியெல்லாம் யோசிக்க எப்படித்தான் முடியுதோ தெரியவில்லை.....

லோரன்ஸ் ஈடுபாடுடன் நடித்திருக்கிறார். நடனம் தெரிந்த ஒருவர்தான் பொருத்தமானவர் என்பதை உணர்ந்துதான் இவர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெளிவு....

ஒரு வைரம் இருந்தால் தன்னுடன் இருக்கும் இரண்டு பிள்ளைகளை காப்பாற்றமுடியும் என்பதற்காக முரட்டுசிங்கமாக மாறியிருக்கிறார் லோரன்ஸ், பத்மப்ரியா நன்றாக நடித்திருக்கிறார். நாசர் கலக்கல், மனோரம்மா அப்பாவி, பாஸ்கர் புதிய மொழியொன்றை பேசி யோசிக்க வைத்திருக்கிறார். கூடவே சந்தியாவும் லக்ஷ்மிராயும் நடித்திருக்கிறார்கள். கலை இயக்குனர் படாதபாடு பட்டிருப்பார் என்பது திரையில் தெளிவாக தெரிகிறது. ஒளிப்பதிவாளர் ஆடுபுலி விளையாட்டு விளையாடியிருக்கிறார். பின்னணி இசை காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது. எல்லாமே நன்றாகத்தான் இருக்கின்றன! பாடல்கள் ஒன்றுமே மனதில் இடம்பிடிக்கவில்லை... G.V பிரகாஷ் என்ன நடந்தது உங்களுக்கு?????? சரி விடுவோம்....

படம் பார்க்ககூடியவாறு இருப்பது தற்போதைய மகிழ்ச்சி....

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்... பாடம் புகட்டியிருக்கிறது சீனியர் நடிகர்களுக்கு...........



N.நிழல்

6 comments:

  1. உண்மை தான்! லாஜிக் பார்க்காமல் சிரித்து ரசிக்கக்கூடிய திரைப்படம். ஹொலிவூட் சினிமாவுக்கு நிகரான காட்சியமைப்பு! சரவெடி சிரிப்பு! நடிகர்கள் அனைவரும் தத்தமது பங்கை நிறைவாக செய்திருக்கிறார்கள் என்றே கூறலாம்.

    இருந்தாலும் தனிப்பட்டமுறையில் சில பாடல்கள் எனக்கு மிகப் பிடித்திருந்தது அண்ணா...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. உங்களுக்கு பிடித்த பாடல் எது ?

    ReplyDelete
  4. உண்மை தான்! லாஜிக் பார்க்காமல் சிரித்து ரசிக்கக்கூடிய திரைப்படம்.சில பாடல்கள் எனக்கு மிகப் பிடித்திருந்தது அண்ணா...

    ReplyDelete
  5. ராஜசிங்கம் ராஜசிங்கம் எனக்கு மிகப் பிடித்த அண்மைக்காலப் பாடல்களில் ஒன்று.. பாடல் வரிகளுக்காகவே பலதடவை கேட்கலாம்...

    ReplyDelete
  6. ரான்சிலேட்டர பத்தி எதுவுமே சொல்லலயே..
    அவர் வந்தபிறகு தானே படமே சூடு பிடிச்சுது...

    ReplyDelete