
என்னை மிரளவைத்த ஸ்ரீதர் பிச்சையப்பா,கலையுலகை இருளவைத்துவிட்டார்.

எல்லோருக்கும் இவரை ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமே தெரியும். ஆனால், இவருக்கு கலையறிவு அதிகம். திறமையான ஓவியர்[இவரது இல்லத்தில் ஒரு தனி அறை உள்ளது. அந்த அறையின் பெயர் சித்திர வதைக்கூடம். அவர் வரைந்த அனைத்து ஓவியங்களும் அங்கு வைக்கப்பட்டுள்ளது] சிறந்த எழுத்தாளர், ஆழமான அர்த்தமுடைய கவிதைகளை படைத்தவர், நல்ல நடிகர், பாடகர், திறமையான பேச்சாளர், இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம்.....

அவருடன் பழகிய நாட்கள் என்வாழ்நாளில் மறக்கமுடியாதவை.
சூரியன் வானொலியில் நான் வழங்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கேட்கும் ஒருவராகவும் என்னை கவர்ந்தார். அவர் இறந்த செய்தி கேள்விபட்டதும் என் நினைவுக்குவந்தது கடந்த SEPTEMBER மாதம் எனது பிறந்தநாளை முன்னிட்டு அவர் எனக்கு அனுப்பிய வாழ்த்தட்டை.
உங்களை சந்திக்கவரும்போது, நவநீதனும் பிரபல திறமையான ஒலிபரப்பாளர் என்ற பெயர்பெற்று வருகிறேன். எனக்காக காத்திருங்கள்.........
நன்றி ஸ்ரீ அண்ணா......

நீங்கள் இல்லாத கலை, களை கட்டுமா???????????
We too miss you Sri Anna :(
ReplyDeleteஆழ்ந்த வருத்தங்கள். கலைஞனைக் கொண்டாடாத தேசம் என்றுமே வளர்ச்சி பெறாது.
ReplyDelete