
"சிங்கம்" திரைப்படம் பார்த்தேன் ரசித்தேன்.......
சூர்யாவிடம் அடிவாங்கும் இருபதிற்கும் அதிகமானவர்கள் காற்றில் பறந்து விழுந்தாலும் ஏற்றுக்கொள்ள முடிகிறது.
சூர்யா அடிக்கும் அடி ஒவ்வொன்றும் இடியாகவே இருக்கிறது. கைகளும் கால்களும் எதிரிகளை பந்தாடும்போது சூர்யாவின் முகத்தில் தெரிகிறது ஆவேசம்....
சண்டைக்காட்சிகள் மட்டுமல்ல காதல்,அன்பு,உரிமை என சரியாக வாழையிலையில் பரிமாறப்பட்ட படையல் "சிங்கம்".....
கதையோடு இணைந்துசெல்லும் அனுஷ்கா அழகு ,விவேக் அட்டகாசம்....
நீண்ட அமைதிக்குப்பின் வெறியுடன் ஹரி தந்திருக்கும் திரைவிருந்துதான் "சிங்கம்".
"சுறா"வில் வில்லன் என்று ஒருவரை அறிமுகம் செய்துவைத்தார்களே!அவரின் முகத்தை ஒருநிமிடம் உற்றுப்பார்த்தால் """""கெகபுககெகபுக""""" என்று சிரிப்புதான் வரும்.
பிரகாஷ்ராஜ் சூர்யாவின் செயல்களுக்கு உயிர் தந்திருக்கிறார்.......
பாடல்கள் கேட்கக்கேட்க இனிக்கின்றன. பின்னணி இசையும் அசத்தல்........
"சிங்கம்" ரசிகர்களுக்கு கிடைத்த விலை மதிக்கமுடியாத தங்கம்.....
படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் சில>>>>>>>>>


